அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்

Arvind Kejriwal Bail Reject: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 9, 2024, 05:25 PM IST
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம் title=

அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி: கடந்த சில நாட்களாக அமலாக்கத் துறையின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ​​கைது செய்வது சரியா தவறா என்பது சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அது தேர்தல் நேரத்தைப் பொறுத்து அல்ல என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

மார்ச் 21 அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்

டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறை கூட அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு வரவில்லை. எனவே அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் உள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அனுதாப அலை

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான கூட்டம் டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்தியது. மறுபுறம் கைது நடவடிக்கைக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீது மக்கள் மனதில் அனுதாப அலை உருவானது.

மேலும் படிக்க - முதல்வர் பதவியில் இருந்து நீங்குங்கள்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. கெஜ்ரிவால் நிம்மதி

கைது எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல்

இருப்பினும், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. 

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனது தீர்ப்பில், "அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதமானது அல்ல. மேலும் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே கெஜ்ரிவாலின் கைது செல்லுபடியாகும். 

எனவே அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படுகிறது. கைது செய்வது சரியா தவறா என்பது சட்டத்தால் முடிவு செய்யப்படுகிறது. மாறாக தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று உயர் நீதிமன்ற பெஞ்ச் கூறியது. 

மேலும் நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள் . அரசியலில் இருந்து விலகி இருப்பதே நீதித்துறையின் சுதந்திரம்" என நீதிபதிகள் கூறினார்கள்.

மேலும் படிக்க - சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News