வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள்

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2024, 05:16 PM IST
  • அமேதியின் கதிதான் வயநாட்டிற்கும்: ஸ்மிருதி இரானி.
  • ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டும் ஆனி ராஜா
  • வயநாடு என் வீடு: அன்பை பொழிந்து ஓட்டு கேட்கும் ராகுல் காந்தி.
வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள் title=

Lok Sabha Elections: இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது.  

விஐபி தொகுதி வயநாடு 

கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ்  (Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

2019 மக்களவைத் தேர்தல்

2019 மக்களவைத் தேர்தலில், வயநாட்டில் கடுமையான போட்டி இருந்தது. இந்தத் தொகுதியில் 2019 ஆம் ஆண்டில் 80.28 சதவீத வாக்குகள் பதிவாகின. 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 7,06,367. ராகுல் காந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுனீரை தோற்கடித்தார். சுனீர் பெற்ற மொத்த வாக்க்குகள் 2,74,597. 2019 மக்களவைத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் தோராயமாக மொத்த வாக்காளர்கள் என்ணிக்கை 1359679 ஆக உள்ளது.

அனல் பறக்கும் பிரச்சாரம்

வயநாட்டில் பல நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. பிற கட்சிகளை சாடியும், வயநாட்டு மக்களையும், இயற்கை வளத்தை புகழ்ந்தும் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாகஜவின் சூரத் வெற்றி... கடந்த கால தேர்தல்களில் வென்றவர்கள் எத்தனை பேர்?

அமேதியின் கதிதான் வயநாட்டிற்கும்: ஸ்மிருதி இரானி

என்டிஏ -வின் வயநாடு வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான கே.சுரேந்திரனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பல தேசிய தலைவர்களும், உள்ளூர் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். "ராகுல் காந்தி முன்னர் அமேதி மக்களை தனது குடும்பம் என்றார். இப்போது அவர்களை மறந்து விட்டு வயநாடுதான் என் குடும்பம் என்கிறார். அமேதி மக்களின் நிலைதான் வயநாட்டு மக்களுக்கும் ஏற்படும்" என ஸ்மிருதி இரானி தனது பிரச்சாரத்தில் ராகுல் காந்தியை தாக்கி பேசினார். 

ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டும் ஆனி ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் ஆனி ராஜாவும் மும்முரமாகவும் தீவிரமாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது மனதுக்கு பட்ட கருத்துக்களை வெளிப்ப்டையாக மக்கள் முன் வைத்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்பி ராகுல் காந்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட வயநாடு என்ற பெயரையே நாடாளுமன்றத்தில் உச்சரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இதனால் இத்தொகுதி மக்கள் ராகுல் காந்தி மீது பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர் என்று கூறினார். 

வயநாடு என் வீடு: அன்பை பொழிந்து ஓட்டு கேட்கும் ராகுல் காந்தி

மறுபுறன், காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி வயநாட்டு மக்களை புகழ்ந்தும், தன்னை அவர்களில் ஒருவராக காட்டிக்கொண்டும் வாக்கு சேகரிப்பதை தனது பிரச்சார உத்தியாகக் கொண்டுள்ளார். வயநாட்டில் அவர் பல ரோட் ஷோக்களை நடத்தி வருகிறார். சுல்தான் பதேரியில் அவர் நடத்திய பேரணியின் போது வயநாட்டை பற்றியும், அங்குள்ள இயற்கை வளம், மக்கள் என அனைத்தையும் புகழ்ந்து பேசினார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, வயநாடு இந்த பூமியின் மிக அழகிய இடம் என அறிவித்தார். மேலும், தனது தாயாரையும் இங்கு சில நாட்கள் தங்க அழைக்கப்போவதாகவும் அவர் கூறினார். 

வயநாட்டின் வருங்காலம் யார்? மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா? இன்னும் 3 நாட்களின் தங்கள் வாக்குகளின் மூலம் இதற்கு வயநாட்டு மக்கள் பதிலளிப்பார்கள். ஜூன் 4 அன்று நாமும் அதை தெரிந்துகொள்ளலாம்.   

மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News