மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டம்! மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2023, 10:46 AM IST
  • மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்.
  • தினமும் ரூ.7 டெபாசிட் செய்து ரூ.5000 ஓய்வூதியத்தைப் பெறலாம்.
  • திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டம்! மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்! title=

எந்தவொரு பணப்பிரச்சினையும் இன்றி முதுமைக்காலம் சுகமாக கழிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்தும் சேமிக்க வேண்டும். வயதான காலத்தில் எந்தவித கஷ்டமும் படமால் இருப்பதற்கான மிகப்பெரிய ஆதரவாக ஓய்வூதியம் கருதப்படுகிறது, ஆனால் நாம் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அது கிடைக்கும். வயதான காலத்தில் இளமை காலம் போல் ஓடி ஓடி உழைக்க முடியாத நிலையில், உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது, ​​இந்த ஓய்வூதியம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் முதுமையை பொருளாதார ரீதியாக வளமாக்க முடியும், நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? 50% -ஐ தாண்டும் அகவிலைப்படி.. குஷியோடு காத்திருகும் ஊழியர்கள்

உத்தரவாதமான ஓய்வூதியம்

முதுமையை அனுபவிக்கும் கனவை அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்ற முடியும். இது ஒரு ஓய்வூதியத் திட்டம் மற்றும் அரசாங்கமே ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் முதலீட்டைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 5000 ரூபாய் ஓய்வூதியம்

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஓய்வூதியத்தின் கணக்கீட்டைப் புரிந்து கொள்ள, உங்கள் வயது 18 என்று வைத்துக் கொள்வோம், பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.210 அதாவது ஒரு நாளைக்கு ரூ.7 மட்டுமே இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்வதன் மூலம், 60க்குப் பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தைப் பெறலாம். அதேசமயம் ரூ 1,000 ஓய்வூதியம் வேண்டுமானால் இந்த வயதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 42 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.

5 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்

அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்வதன் மூலம், கணவன்-மனைவி இருவரும் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெறலாம். அதேசமயம் 60 வயதுக்குள் கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் இறந்தால், நாமினி முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார். அடல் பென்ஷன் யோஜனா ஒரு ஓய்வூதிய திட்டமாக மிகவும் பிரபலமானது. 2015-16ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பிரபலத்தை இதில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் APY திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு உங்கள் வழக்கமான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்

APY திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் பெறுவீர்கள். இதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த வரிச் சலுகை வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான தகுதியைப் பற்றி பேசுகையில், 18 முதல் 40 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரு கணக்கைத் திறக்க, அவர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சரியான வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். ஏற்கனவே அடல் ஓய்வூதியத்தின் பயனாளியாக இருக்கக்கூடாது.  கடந்த 2022-ம் ஆண்டு இத்திட்டத்தின் விதிகளில் அரசு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்படி வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. டிஏ உயர்வு, இந்த தேதியில் பெரும் பரிசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News