நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா

நீட் தேர்வுக்கு டெல்லியில் ஆதரவு கொடுத்துவிட்டு தமிழகத்தில் அதிமுக வேஷம் போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 20, 2023, 02:52 PM IST
  • நீட் விவகாரத்தில் அதிமுக நாடகம் ஆடுகிறது
  • நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
  • பச்சை துரோகம் செய்துவிட்டதாக திருச்சி சிவா சாடல்
நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா title=

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " மருத்துவபடிப்பு MBBS, BDS மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு என்ற பெயரில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நசுக்குகின்றது. ஆகையால் நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி ஒன்றாக இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்புகளை அவர் நிராகரித்தார். நீட் தேர்வு என்பது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்ற கனவை எட்டா கனியாக ஆக்கிவிட்டது. மேலும், ஒன்றிய அரசு கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவம் இல்லாத கல்வி முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், அவருடைய மருத்துவ படிப்பு கனவு  நிராகரிக்கப்படுகிறது.  நீட் தேர்வுக்காக தற்போது இந்தியாவில் பல தனியார் கோச்சிங் சென்டர் உருவாகி உள்ளது.

மேலும் படிக்க | ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்!

பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று,  எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பை தொடர்கிறார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நசுக்கப்படுகிறது. தொடர்ந்து திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறது. என் நிலையில் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, வாக்கெடுப்பு நடக்கும்போது அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்து பச்சை துரோகம் செய்தது அதிமுக. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் என அதிமுக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. விரைவில் இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழ்நாடு நிச்சயம் நீட் தேர்வில் விதிவிலக்கு பெரும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார். 

தொடர்ந்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்கவும் ,மக்கள் மத்தியில் விழிப்புணர் ஏற்படுத்த, தமிழ்நாடு முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே விரைவில் நாங்கள் வெற்றியை பெறுவோம் .தமிழ்நாடு நீட் தேர்வில் இருந்து விலக்கு நிச்சயம் பெறும். திமுக தொடர்ந்து வீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டு தான் வருகிறது. அதே போன்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்ததை,  நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு உடன்படாத காரணத்தினால் தான் இன்றளவு இழுத்து அடிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் நீட்  இல்லாத சூழ்நிலை உருவாகும்" என்று பேசினார்.

மேலும் படிக்க | சென்னை: ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற நினைத்த முதியவர் - உஷாரான வியாபாரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News